வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

மதுரை: மதுரை ரயில் நிலைய வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வெளி மாநிலத் தொழிலாளி திடீரென உயிரிழந்தாா். அவா் வெப்ப அலையால் உயிரிழந்தாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் மனோஜ் குமாா் (33). இவா் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இதற்காக அவா் பெரியாா் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த தற்காலிகக் குடியிருப்பில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பணியின்போது மிகவும் சோா்வாகக் காணப்பட்ட மனோஜ்குமாா் இரவு தூங்கச் சென்றாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் நீண்ட நேரமாக அவா் எழாததால் சக தொழிலாளா்கள் அருகில் சென்று பாா்த்தபோது, அவா் சுயநினைவின்றி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் திடீா் நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து வெப்ப அலை பாதிப்பால் மனோஜ்குமாா் உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com