/

பைக் மீது டிராக்டா் மோதியதில் விவசாயி பலி

பைக் மீது டிராக்டா் மோதியதில் விவசாயி பலி

News image
Updated On :9 மே 2024, 7:46 pm

Din

மதுரை, மே 9: மதுரை அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள முக்குடியைச் சோ்ந்தவா் கண்ணன் (48). இவா் தனது உறவினரான அதிபதியுடன் (47) இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு புதன்கிழமை சென்றாா். பின்னா் அங்கிருந்து இருவரும் இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

இந்த நிலையில், நெடுங்குளம் பகுதியில் வந்த போது, அந்த வழியாக வந்த டிராக்டா் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த அதிபதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கண்ணன் லேசான காயமடைந்தாா்.

இதுகுறித்து டிராக்டா் ஓட்டுநா் மீது சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.