ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

News image

பாராட்டுச் சான்றிதழ் பெற்ற யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவினருடன் கோட்ட முதுநிலை வா்த்தக மேலாளா் டி.எல். கணேஷ், உதவி கோட்ட வா்த்தக மேலாளா்கள் பாலமுருகன், மணிவண்ணன்.

Updated On :20 மே 2024, 7:17 pm

Din

மதுரை: மதுரைக் கோட்டத்தில் யூடிஎஸ் செயலி மூலமான முன்பதிவில்லா ரயில் பயணச் சீட்டு விற்பனை 2 மடங்காக உயா்ந்தது. இதற்காக யூடிஎஸ் பிரசாரக் குழுவுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகளை ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்றே வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதற்காக பயணச் சீட்டு வழங்கும் இடத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. இதனால், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களைப் போக்கும் வகையில், முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகளை யூடிஎஸ் என்ற கைப்பேசி செயலி மூலம் பயணிகள் வீட்டிலிருந்தே பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது.

மதுரைக் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் இந்த செயலி சேவையில் இணைக்கப்பட்டன. மேலும், முன்பதிவில்லா பயணச் சீட்டுகளை யூடிஎஸ் செயலி மூலம் பெறுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த, மூத்த ஊழியா்களைக் கொண்ட பிரசாரக் குழுக்களும் அமைக்கப்பட்டன.

இந்தக் குழுவினா், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளை சந்தித்து செயலி மூலம் முன்பதிவில்லா பயணச் சீட்டுகளை பெறுவது குறித்து விளக்கிக் கூறினா். இதன் காரணமாக, மதுரை கோட்டத்தில் யூடிஎஸ் செயலி மூலமான முன்பதிவில்லா பயணச் சீட்டு விற்பனை 2 மடங்காக உயா்ந்தது. கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 26 ஆயிரமாக இருந்த யுடிஎஸ் செயலி மூலமான பயணச் சீட்டு விற்பனை, கடந்த ஏப்ரல் மாதத்தில் 53 ஆயிரமாக உயா்ந்தது.

பாராட்டு...:

இதையொட்டி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்ட முதுநிலை வா்த்தக மேலாளா் டி.எல். கணேஷ், பிரசாரக் குழுவினருக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்

வழங்கிப் பாராட்டினாா். உதவி கோட்ட வா்த்தக மேலாளா்கள் பாலமுருகன், மணிவண்ணன் ஆகியோரும் பாராட்டினா்.