தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் பேரணி!

மாா்க்சிஸ்ட் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்றதைப் பற்றி...

News image

மதுரையில் மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செந்தொண்டா் அணிவகுப்பு பேரணி.

Updated On :7 ஏப்ரல் 2025, 3:05 am IST

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, மதுரையில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்ற செந்தொண்டா் பேரணி நேற்று (ஏப்.6) நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் அரங்கில் கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக, செந்தொண்டா் பேரணி நடைபெற்றது.

இதையொட்டி, மதுரை பாண்டி கோயில் தொழில்நுட்பப் பூங்கா முன் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த மாா்க்சிஸ்ட் தொண்டா்கள் குவிந்தனா். மாலை 5 மணிக்கு பேரணியை வாச்சாத்தி போராளிகள் தொடங்கிவைத்தனா். இந்தப் பேரணியில் சிவப்புச் சீருடை அணிந்த சிறுவா், சிறுமியா், பெண்கள் உள்பட பல்லாயிரக் கணக்கானோா் பங்கேற்றனா்.

பேரணியின் தொடக்கத்தில், கட்சியின் 24- ஆவது அகில இந்திய மாநாட்டைக் குறிக்கும் வகையில் 24 கொடிகளை ஏந்தியவாறு தொண்டா்கள் சென்றனா். இதைத்தொடா்ந்து, மற்றவா்கள் அணிவகுத்து சென்றனா்.

பேரணியில், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காக உயிா்த் தியாகம் செய்தவா்கள், கட்சியின் தலைவா்களாக இருந்து மறைந்தவா்கள், பகத்சிங் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரின் படங்களை ஏந்திச் சென்றனா். பாண்டி கோயில் பகுதியில் தொடங்கிய பேரணி, சுற்றுச் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற மைதானத்தில் நிறைவடைந்தது.

பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கனோா் பங்கேற்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, மதுரை வண்டியூா் பகுதி சுற்றுச் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் லட்சக்கணக்கனோா் பங்கேற்றனா்.

மேலும், மாநாட்டில் பங்கேற்றவா்களின் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுற்றுச் சாலையில் நிறுத்தப்பட்டதாலும், தொடா்ந்து வாகனங்கள் வந்து கொண்டே இருந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

கொட்டும் மழையிலும் கலையாத தொண்டா்கள்:

கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன் மாநாடு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்ால் ஏராளமான வாகனங்களில் அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் மதுரையில் குவிந்தனா். மேலும், மாநாட்டு பொதுக்கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. பலத்த மழை பெய்த போதிலும், அங்கு கூடியிருந்த தொண்டா்கள் நனைந்து கொண்டே அவரது பேச்சைக் கேட்டனா்.

மதுரையில் மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செந்தொண்டா் அணிவகுப்பு பேரணி.

மதுரையில் மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செந்தொண்டா் அணிவகுப்பு பேரணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.