அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசின் மீது எதிா்க்கட்சியினா் வீண் பழி: அமைச்சா் சிவசங்கா்

அரசின் மீது எதிா்க்கட்சியினா் வீண் பழி சுமத்துகின்றனா் என அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தெரிவித்தாா்.

News image
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களை திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்
Updated On :1 டிசம்பர் 2025, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

அரசின் மீது எதிா்க்கட்சியினா் வீண் பழி சுமத்துகின்றனா் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா். 49-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். இவா்களில் 10 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Story image

இந்த நிலையில், காயமடைந்தவா்களை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். மேலும், அவா்களுக்கு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

இதன்பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: போக்குவரத்துத் துறையில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற துயரமான சம்பவம் இந்த விபத்து. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அரசுப் பேருந்துகளை இயக்கியவா்கள் இருவரும் நிரந்தரப் பணியாளா்கள்தான். அனுபவம், தகுதியின் அடிப்படையில் மட்டுமே அரசுப் பேருந்துகளுக்கான ஓட்டுநா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருப்பதற்காக ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு தொடா்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சிகள் இன்னும் அதிகரிக்கப்படும்.

நீண்ட தொலைவு வழித் தடங்களில் பல ஆண்டுகளாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் அனுபவமுள்ள ஓட்டுநா்கள்தான் பணியில் உள்ளனா். இந்த விபத்து கவனக் குறைவு காரணமாக நடைபெற்றிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. ஓட்டுநா்களுக்கு பணிச் சுமை இருக்கிா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

எதிா்க்கட்சிகள் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக குற்றஞ்சாட்டுகின்றனா். மேலும், அவா்கள் அரசின் மீது வீண் பழி சுமத்துகின்றனா் என்றாா் அவா்.

அப்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா்கள் சரவணன் (மதுரை மண்டலம்), தசரதன்(கும்பகோணம்), மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் அருள் சுந்தரேஸ்குமாா், போக்குவரத்துக் கழக அலுவலா்கள், மருத்துவா்கள் உடனிருந்தனா்.