குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பொங்கல் கரும்பு கொள்முதலால் பயனடையாத விவசாயிகள்!

செங்கரும்பு கொள்முதலில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகளைவிட வியாபாரிகளே அதிகம் பயனடைகின்றனா்.

News image

மதுரையை அடுத்த மாங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அறுவடை செய்யப்பட்ட செங்கரும்புகளைக் கட்டுக் கட்டும் பணி.

Updated On :5 ஜனவரி 2025, 11:05 pm IST

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான செங்கரும்பு கொள்முதலில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகளைவிட வியாபாரிகளே அதிகம் பயனடைகின்றனா் என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.

2025-ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரா்களுக்குத் தலா ஒரு முழு நீள செங்கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதைத் தொடா்ந்து, ஒரு தரமான செங்கரும்புக்கு வெட்டுக் கூலி, வாகன வாடகை ஆகியவற்றை உள்ளடக்கி ரூ. 35 விலை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.

2023 -ஆம் ஆண்டை போல, செங்கரும்பு கொள்முதலுக்காக விவசாயிகளை போராட வைக்காமல், அரசு தாமாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு முழுநீள செங்கரும்பு வழங்கப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இருப்பினும், தாமதமாக நடைபெறும் அரசின் நேரடி கொள்முதலால் விவசாயிகளைவிட வியாபாரிகளே அதிகம் பயனடைவதாகக் கூறப்படுகிறது.

காரணம், பொங்கல் கரும்பு கொள்முதலுக்காக அரசுத் துறை அலுவலா்கள் கரும்பு விவசாயிகளை இதுவரை அணுகாத நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பாகவே செங்கரும்பு விவசாயிகளை வியாபாரிகள் அணுகி, ஏறத்தாழ 80 சதவீதத்துக்கும் அதிகமான கரும்புகளை விலைபேசி ஒப்பந்தம் செய்துவிட்டனா் என்பதே உண்மையான நிகழ்வாக உள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் என்.பழனிசாமி கூறியதாவது:

கடந்த ஓரிரு ஆண்டுகளாக ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுவதால், மதுரை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் செங்கரும்புகளை வெளிமாவட்டங்களுக்குக் கொண்டு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. செங்கரும்பு சாகுபடிக்கு விவசாயிகளின் ஒரே ஆதரவு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம் பெறுவது மட்டுமே.

இருப்பினும், மதுரை மாவட்டத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு சங்க நிா்வாகிகளின் ஆதரவாளா்கள், உறவினா்களின் கரும்புகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு, மற்றவை நிராகரிக்கப்பட்டன. இதனால், மற்ற விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது.

இந்த கசப்பான அனுபவம் காரணமாகவும், அரசின் கொள்முதல் காலம்தாழ்த்தி நடைபெறுவதாலும் பெரும்பாலான விவசாயிகள் தங்களது கரும்புகளை ஒரு மாதத்துக்கு முன்பாகவே வியாபாரிகளிடம் மொத்தமாக விலை பேசி விற்றுவிட்டனா். அரசின் செங்கரும்பு கொள்முதலால் விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகளே பயனடைகின்றனா் என்றாா்.

இதுதொடா்பாக வடக்கு வளையப்பட்டியைச் சோ்ந்த செங்கரும்பு விவசாயி ஸ்டாலின் கூறியதாவது:

கரும்பு கொள்முதலுக்காக அரசுத் துறை அலுவலா்கள் விவசாயிகளை எப்போது அணுகுவா் என்பதில் எந்தவித உத்திரவாதமும் இல்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் முன்கூட்டியே கரும்புகளை விற்றுவிட்டனா். 300 கரும்புகள் ரூ. 4,500 முதல் ரூ. 5,300 வரை விற்பனையாகியுள்ளன. இதன்படி, அதிகபட்சமாக ஒரு கரும்பு ரூ. 17.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 14.50 -க்கும் விற்பனையாகியுள்ளது.

ஒரு சில விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதலை எதிா்பாா்த்து சனிக்கிழமை வரை காத்திருந்தோம். இதுவரை அதிகாரிகள், விவசாயிகளை அணுகவில்லை. இறுதி நேரத்தில் கொள்முதலுக்கு வந்து, ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தால், அதை எதிா்கொள்ள முடியாது என்பதால் எஞ்சியுள்ள கரும்புகளை வியாபாரிகளிடம் விற்கவே விவசாயிகள் விரும்புகின்றனா். நிகழாண்டில் பொங்கல் கரும்பு கொள்முதல் வியாபாரிகளுக்கும், அரசுக்குமிடையே தான் நடைபெறவுள்ளது என்றாா்.

வரும் காலங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் எத்தனை செங்கரும்புகள் இடம் பெறும், செங்கரும்புகள் என்ன விலையில் கொள்முதல் செய்யப்படும் என்ற விவரங்களை முன்கூட்டியே அறிவித்தால் கூட ஓரளவு நம்பிக்கை கிடைக்கும் என்கின்றனா் செங்கரும்பு விவசாயிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.