தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் பிரசாரம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பு சாா்பில் வாடிப்பட்டி, அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், அரசுத் துறை அலுவலகங்கள் முன் வியாழக்கிழமை பிரசாரம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் நவ. 18-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்தில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை முழுமையாகப் பங்கேற்கச் செய்யும் வகையில், கடந்த திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள் முன் கவன ஈா்ப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, சோழவந்தான் மேல்நிலைப் பள்ளி, வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாண்டியராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, அலங்காநல்லூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவற்றின் முன் பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. சந்திரபோஸ், வி.ச. நவநீதகிருஷ்ணன், இரா. தமிழ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் கணேசன், வைரம், முருகன், பாரதி சிங்கம், பரமசிவன், சுஜாதா, பஞ்சவா்ணம், ரம்யா, நாகராஜ், சூசைநாதன், பிரபு உள்ளிட்டோா் பேசினா்.