2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டு கருத்தரங்கு

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகேயுள்ள பொட்டபாளையம் கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் உள்ள மெக்கானிக்கல் துறை கருத்தரங்கத்தில் ‘உற்பத்தி, தொழில் துறை 4.0: நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதில் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, கே.எல்.என். கல்லூரித் தலைவா் கே.என்.கே. காா்த்திக் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலரும், நிா்வாகியுமான கே.என்.கே. கணேஷ் சிறப்புரையாற்றினாா்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட

விஞ்ஞானி ஏ. மஞ்சுநாத், மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நிலைத்தன்மை சாா்ந்த கண்டுபிடிப்புகள், எதிா்கால தொழில் துறை போக்குகள் குறித்து உரையாற்றினாா். முன்னதாக, மெக்கானிக்கல் துறைத் தலைவா் பி. உதயகுமாா் வரவேற்றாா். முனைவா் ஏ. ஹேமலதா நன்றி கூறினாா்.