மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: மு.க. அழகிரி நீதிமன்றத்தில் முன்னிலை

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பான வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி முன்னிலையானாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பான வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி செவ்வாய்க்கிழமை முன்னிலையானாா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் தனது மகன் துரைதயாநிதி பெயரில் தயா பொறியியல் கல்லூரியை மு.க.அழகிரி கட்டினாா். இந்த நிலையில், செவரக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராமன் என்பவா் தயா பொறியியல் கல்லூரி கட்டுவதற்காக விநாயகா் கோயில் இடத்தை அழகிரி தரப்பு ஆக்கிரமித்ததாக நில அபகரிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் கடந்த 2014- ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி நேரில் முன்னிலையானாா். இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வழக்கு விசாரணையை வருகிற பிப்.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.