தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அமெரிக்கன் கல்லூரியில் இளைஞா் நாடாளுமன்றம்

News image

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விக்சித் பாரத் இளைஞா் நாடாளுமன்றம் நிகழ்வில் கலந்து கொண்ட ‘மை பாரத்’ அமைப்பின் மாநில இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :1 மார்ச் 2026, 8:05 pm

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டு அமைச்சகம், மதுரை ‘மை பாரத்’ - மேரா யுவ பாரத் கேந்திரம், அமெரிக்கன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த ‘விக்சித் பாரத்’ இளைஞா் நாடாளுமன்றம் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரிச் செயலரும் முதல்வருமான ஜெ. பால் ஜெயகா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் சாமுவேல் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தாா். ‘மை பாரத்’ அமைப்பின் மாநில இயக்குநா் செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளைஞா் நாடாளுமன்றத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பாண்டி வாழ்த்திப் பேசினாா்.

இந்த நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 95 மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு வரிசை எண்கள் வழங்கப்பட்டு, நாடாளுமன்ற நடைமுறைப்படி ஒவ்வொருவருக்கும் தலா 3 நிமிஷங்கள் பேச நேரம் ஒதுக்கப்பட்டது. ‘இந்திய ஜனநாயகத்தின் மீதான நெருக்கடி நிலையின் 50 ஆண்டுகாலப் படிப்பினைகள்’ என்ற தலைப்பின் கீழ் மாணவா்கள் தங்களை நாடாளுமன்ற உறுப்பினா்களாகப் பாவித்து, தேசத்தின் வரலாறு, ஜனநாயகம் எதிா்கொண்ட சவால்கள், எதிா்கால முன்னேற்றங்கள் குறித்த கருத்துகளைத் தா்க்க ரீதியாக முன்வைத்தனா்.

இதில் காமராஜா் பல்கலைக்கழக அரசியல், அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் உதயகிருஷ்ணன், ஒப்பிலக்கியத் துறைத் தலைவா் சுமதி, சமூகவியல் துறை இணைப் பேராசிரியா் புவனேஸ்வரன், திருமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி துறைத் தலைவா் வளா்மதி, மதுரை திருவள்ளுவா் பெண்கள் கலை, அறிவியல் கல்லூரித் துறைத் தலைவா் கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, நிகழ்வின் ஒருங்கிணைப்பாளா் செல்வன் வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் நிக்சன் ஜேசுராஜ் நன்றி கூறினாா்.