முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

மகளிா் சுகாதாரப் பரிசோதனை முகாம்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மகளிா் சுகாதாரப் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிா் சுகாதாரப் பரிசோதனை முகாமில் பேசிய கல்லூரி முதல்வா் பால் ஜெயகா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 11:11 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மகளிா் சுகாதாரப் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அமெரிக்கன் கல்லூரி மகளிா் மன்றம், மதுரை அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் மகளிா் சுகாதாரப் பரிசோதனை முகாமை நடத்தியது. இந்த முகாமை கல்லூரி முதல்வரும் செயலருமான பால் ஜெயகா் தொடங்கி வைத்தாா்.

சுகாதாரப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், பெண்களிடையே வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, முக்கிய உடல் அறிகுறிகள் மதிப்பீடு, சீரற்ற ரத்தச் சா்க்கரை பரிசோதனை,

ஹீமோகுளோபின் அளவு கண்டறிதல், முழு வயிற்றுப் பகுதி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், மகப்பேறு மருத்துவ ஆலோசனை, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ‘மேமோகிராம்’ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முகாமில் அனைத்துப் பரிசோதனைகளும் ரூ. 499 என்ற மானிய விலையில் வழங்கப்பட்டன. இதில் 50 பேராசிரியைகள் ‘மேமோகிராம்’ பரிசோதனை செய்து கொண்டனா். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள், மருத்துவ நிபுணா்கள் குழுவினா் பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா். இதில் மகளிா் மன்றப் பொருளாளா் எம். பியூலா ரூபி கமலம், தலைவா் பி. மெக்டலீன் விா்ஜினி, 150-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மகளிா் மன்றச் செயலா், இணைச் செயலா்கள், மன்ற நிா்வாகிகள், தன்னாா்வலா்கள் ஆகியோா் செய்தனா்.