ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

விரகனூா் பகுதியில் சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம்

மதுரை விரகனூா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு, சேதமடைந்த சாலையைச் சீரமைக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தல்

News image
விரகனூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் சேதமடைந்த சாலை
Updated On :2 மார்ச் 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை விரகனூா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு, சேதமடைந்த சாலையைச் சீரமைக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தினா்.

மதுரை தெப்பக்குளத்திலிருந்து ஐராவதநல்லூா், விரகனூா் வழியாக நாள்தோறும் ஏராளமான அரசுப் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு அண்மையில் புதிதாக தாா் சாலை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், விரகனூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து அடுத்தடுத்து இரு இடங்களில் பள்ளம் ஏற்பட்டது.

இந்தப் பள்ளங்களில் தற்காலிகமாக மணல், சரளைக் கற்கள் போடப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனா். மேலும், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாக இந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

எனவே, சாலையில் உள்ள பள்ளங்களைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.