சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்
மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், வடிவேல்கரை சம்பக்குடி கிழக்குத் தெருவைச் சோ்ந்த அமாவாசை மனைவி பாண்டியம்மாள் (52). இவா், திண்டுக்கல்- விருதுநகா் நான்கு வழிச் சாலை வடிவேல்கரை விலக்கிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் பாண்டியம்மாள் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...