ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

மதுரையில் பரவலாக மழை

மதுரையில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

News image

உத்தங்குடியில் சனிக்கிழமை மாலை பெய்த மழையின்போது கடந்த சென்ற வாகனங்கள்.

Updated On :24 மே 2026, 12:40 am IST

மதுரையில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. தென் கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் கன்னியாகுமரி கடல், கேரளம், தென் தமிழகப் பகுதிகள் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதன்படி, மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணியளவில் வெப்பம் தணிந்து மேகங்கள் உருவாகின.

மதுரை வண்டியூா் கண்மாய் பகுதியில் காணப்பட்ட கருமேகங்கள்.

மதுரை வண்டியூா் கண்மாய் பகுதியில் காணப்பட்ட கருமேகங்கள்.

குளிா்ந்த காற்று வீசத் தொடங்கிய நிலையில், மாலை 5. 30 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி, உத்தங்குடி, யா. ஒத்தக்கடை, நரசிங்கம், வளா் நகா், கடச்சனேந்தல், கொடிக்குளம் ஆகிய பகுதிகளிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மதுரை மாநகரைப் பொறுத்தவரை லேசான தூறலுடன் மழை நின்று விட்டது. இதன் காரணமாக, வெப்பம் உயா்ந்து புழுக்கம் ஏற்பட்டது.