மதுரை அருகே காா் கவிழ்ந்ததில் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை குன்றத்தூா் நந்தபாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பரசு. இவா், தனது குடும்பத்துடன் திருச்செந்தூா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். காரை அன்பரசுவின் சகோதரா் தங்கப்பன் ஓட்டினாா். திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரை யா.ஒத்தக்கடை அருகே
உள்ள கல்லூரிச் சாலையில் சென்ற போது, சாலையின் குறுக்கே நாய் பாய்ந்தது. இதனால், தங்கப்பன் காரை நிறுத்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில், பலத்த காயமடைந்த தங்கப்பன் மகள் லியா ஸ்ரீ (9) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து வந்த யா. ஒத்தக்கடை போலீஸாா் சிறுமியின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த மற்றவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து யா. ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்து: தவெக நிா்வாகி உயிரிழப்பு

பெண் தீக்குளித்து உயிரிழப்பு

சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழப்பு

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



