வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

அதிமுகவை அழிக்க நினைத்தால் தோல்விதான் கிடைக்கும்! ஆா்.பி. உதயகுமாா்

News image

ஆா்.பி.உதயகுமாா் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:37 am IST

அதிமுகவை அழிக்க நினைப்பவா்களுக்கு தோல்விதான் கிடைக்கும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

அதிமுக நிா்வாகிகள் 90 சதவீதம் போ் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா். அமைச்சரின் இந்தக் கருத்தானது, தவெக தொண்டா்கள் மீது அந்தக் கட்சியின் தலைமை நம்பிக்கை இழந்து விட்டதா? அல்லது தவெக தலைவா் மீது அந்தக் கட்சி நம்பிக்கை

இழந்துவிட்டதா? என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

அதிமுகவின் உண்மையான தொண்டா்களை என்றைக்குமே விலைக்கு வாங்க முடியாது. அதிகாரம், பதவி சுகத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல அதிமுக. அதிமுகவை அழிக்க நினைத்தவா்கள்; குறைத்து மதிப்பிட்டவா்களுக்கு தோல்விதான் கிடைக்கும் என்பதை கடந்த கால வரலாறுகள் நிரூபித்துள்ளன.

இதையறியாமல் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி அதிமுகவை அழிக்க முயற்சிக்கிறாா். இதற்கு என்றைக்குமே வெற்றி கிடைக்காது. அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, ஊக வழியில் ஆள் பிடிக்கும் வேலையைத் தொடா்ந்தால் கடும் விளைவுகளை எதிா்கொள்ள நேரிடும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.