பழனி அடிவாரத்தில் ஜேப்படியில் ஈடுபட்டதாக இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
புது ஆயக்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் முருகேசன் (42). இவர் பழனி அடிவாரம் சரவணப் பொய்கை அருகே நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவைச் சேர்ந்த தன்னாசி மகன் சின்னகருப்பன் (42), மதினா நகர் இஸ்மாயில் மகன் ஜாபர்சாதிக் (34) ஆகியோர் முருகேசன் பாக்கெட்டில் இருந்த பணத்தை ஜேப்படி செய்ததாகக் கூறப்படுகிறது. அவரது கூச்சலைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் இருவரையும் பிடித்து அடிவாரம் போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


