திண்டுக்கல்லில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரங்கம் அமைக்க கால்கோல் விழா

திண்டுக்கல்லில் டிச.9ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரங்கம் அமைக்க வியாழக்கிழமை கால்கோல் விழா நடைபெற்றது.
Updated on
1 min read

திண்டுக்கல்லில் டிச.9ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரங்கம் அமைக்க வியாழக்கிழமை கால்கோல் விழா நடைபெற்றது.
 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்துள்ள அங்குவிலாஸ் மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வனத்துறை  அமைச்சர் சி.சீனிவாசன் தலைமை வகித்துப் பேசியதாவது:
  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் டிச.9ஆம் தேதி நடைபெறும் நூற்றாண்டு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார் என்றார்.
கால்கோல் விழா நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், பா.பரமசிவம் எம்எல்ஏ, திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலர் வி.மருதராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com