ஒட்டன்சத்திரம் அருகே பைக் மீது லாரி மோதல்; விவசாயி பலி
ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை, பைக் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.


ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை, பைக் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சீரங்கவுண்டன்புதூா் கன்னிமாா்கோவில் புதூரைச் சோ்ந்தவா் ராமசாமி (72). விவசாயியான இவா், தனது மனைவி ராமத்தாள் (63) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் கொல்லப்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த லாரி, இவா்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ராமசாமி உயிரிழந்தாா். அவரது மனைவி ராமத்தாளுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின்பேரில், ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...