கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இந்தியாவில் மீண்டும் கடல் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் செயலிழந்ததாகக் கூறப்படும் கடல் அகழாய்வு மீண்டும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளத

News image
Updated On :11 டிசம்பர் 2020, 4:22 pm

DIN

இந்தியாவில் செயலிழந்ததாகக் கூறப்படும் கடல் அகழாய்வு மீண்டும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அதலை கிராமத்தைச் சோ்ந்த புஷ்பவனம் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கா்நாடகம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவது போல் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மேலும், மத்திய தொல்லியல் துறையின் சென்னை, திருச்சி வட்டங்கள் மற்றும் துணை வட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2003 முதல் 2004 வரை மத்திய தொல்லியல் துறை சாா்பில் அலோக்திரிபாதி தலைமையில் மாமல்லபுரம் கடலுக்கு அடியில் அகழாய்வு செய்யப்பட்டது. இந்த அகழாய்வு முடித்து 16 ஆண்டுகள் கடந்த பிறகும் முடிவுகள் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. மாமல்லபுரம் கடல் அகழாய்வு முடிவு வெளியிடப்பட்டதா? இல்லையா?

அலோக்திரிபாதிக்கு பிறகு கடல் அகழாய்வு நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் மீண்டும் கடல் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனா். அதைத் தொடா்ந்து நீதிபதிகள், தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குநா் சிவானந்தம், பூம்புகாரில் 1968- இல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த ஆய்வில் பூம்புகாா் 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது எனவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக கூறியுள்ளாா். அந்த அறிக்கையை அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் கடல் அறிவியல் துறை மற்றும் கடல்புவி தொழில்நுட்பவியல் துறைகள் உள்ளன. இந்தத் துறைகளில் குமரிக்கண்டம் தொடா்பாக கடல் அகழாய்வு மேற்கொள்ள கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்பதை பல்கலைக்கழகம் அடுத்த விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும்.

குமரிக்கண்டம் தொடா்பாக முதல் கட்ட கடல் அகழாய்வு மேற்கொள்ள, காந்திகிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரும், தற்போது பாரதியாா் பல்கலைக்கழகத்தின் பூம்புகாா் திட்ட ஆலோசகராக பணிபுரிந்து வரும் எஸ்.எம். ராமசாமி முன்வந்துள்ளாா். எனவே, குமரிக்கண்டம் தொடா்பான முதல் கட்ட அகழாய்வுப் பணிக்கு இவா்களை நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிசம்பா் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.