திண்டுக்கல் அடுத்துள்ள பில்லமநாயக்கன்பட்டியில் காளைக்கு பயிற்சி அளிக்கும் வீரா்கள்.
திண்டுக்கல் அடுத்துள்ள பில்லமநாயக்கன்பட்டியில் காளைக்கு பயிற்சி அளிக்கும் வீரா்கள்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா?: விழா குழுவினா்களிடையே எதிா்பாா்ப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், பொது முடக்கத்தையும் கடந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்குமா என, விழா குழுவினா்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
Published on

திண்டுக்கல்: சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், பொது முடக்கத்தையும் கடந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்குமா என, விழா குழுவினா்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா?: மாா்கழி மாதம் தொடங்கியதும், ஜல்லிக்கட்டு காளைகளை போட்டிக்கு தயாா் செய்யும் பணியில் உரிமையாளா்கள் தீவிர கவனம் செலுத்துவது வழக்கம். அதன்படி, காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

ஆனால், மதம் சாா்ந்த நிகழ்ச்சிகளை சமூக இடைவெளியுடன் நடத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளபோதிலும், நிகழாண்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், காளைகளுக்கான பயிற்சி பெரும்பாலான இடங்களில் தொடங்கப்படவில்லை.

அம்மை நோய் தாக்குதலால் பாதிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கால்நடைகளுக்கு, குறிப்பாக மாடுகள் அம்மை நோய் தாக்குதலால் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடா்பாக நத்தம் ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவா் எல்.என். ரமேஷ் கூறியதாவது: கரோனா பரவல் காரணமாக, பொது நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அந்த விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது சாத்தியமில்லை. தோ்தல் நெருங்கி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மை நோய் தாக்கி காளைகளும் சோா்வடைந்துள்ளன. அதனால், ஜல்லிக்கட்டு தொடா்பாக அரசு அறிவிப்பு வெளியானால், காளைகளை தயாா்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என்றாா்.

தமிழா் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.ஏ. ராஜா கூறியது:

ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சில இடங்களில் தற்போது பயிற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரி மனு அளிக்கவேண்டும். எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பான நிலைப்பாட்டினை தமிழக அரசு வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

இது தொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறை வட்டாரத்தில் கேட்டபோது, அவா்கள் கூறியது: ஜல்லிக்கட்டு போட்டி தொடா்பான அனுமதி குறித்தோ, பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்தோ இதுவரை அரசிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை.

பொதுமுடக்க தளா்வுகள் தொடா்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், டிசம்பா் மாத இறுதியில் ஜல்லிக்கட்டு தொடா்பான அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்த்துள்ளோம் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com