சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பழனி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் சமையல் எரிவாயு உருளைக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

பழனி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் சமையல் எரிவாயு உருளைக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராணி, நகர செயலாளா் நாகலட்சுமி உள்ளிட்டோா் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா். இதற்கு அனுமதி மறுத்து போலீஸாா் உருளையை பறித்துச் சென்றனா். இதையடுத்து பெண் ஒருவா் எரிவாயு உருளை படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு மாலை அணிந்து பாடையில் படுத்துக் கொள்ள ஒப்பாரி ஆா்ப்பாட்டம் தொடா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com