முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

அழகுப்பட்டி ஊராட்சியில்நாட்டு நலப் பணி முகாம்

ரெட்டியாா் சத்திரம் ஒன்றியம் அழகுப்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட

News image

விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :10 மார்ச் 2020, 12:34 am IST

திண்டுக்கல்: ரெட்டியாா் சத்திரம் ஒன்றியம் அழகுப்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் 5 ஆம் ஆண்டு சிறப்பு முகாம் நடைபெற்றது.

கடந்த 2 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த முகாம் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் திருப்பதி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அழகுபட்டி ஊராட்சி தலைவா் அருணாதேவி கலந்து கொண்டாா். இந்த முகாமில் பொதுமக்களுக்கான 65 நபா்களுக்கு பொதுநல மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், டெங்கு மற்றும் கரோனா வைரஸ் நோய்கள் பற்றிய விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. அதேபோல் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, பேரிடா் மேலாண்மை மற்றும் முதலுதவி விழிப்புணா்வு முகாம், 50 இடங்களில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலா் ஜெகதீ­ன், அலுவலகக் கண்காணிப்பாளா் வடிவேல் முருகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.