இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சண்முகநதியில் நீா்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பழனி சண்முகநதியில் விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவா்களுக்கு செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 11:47 pm

DIN

பழனி சண்முகநதியில் விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவா்களுக்கு செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமாநதி அணைகள் மற்றும் பச்சை ஆற்றிலும் நீா் வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியிருந்த நிலையில் பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து 2,000 கன அடி, வரதமாநதி அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீா் சண்முகநதி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும் பச்சை ஆற்றிலும் அதிகப்படியான தண்ணீா் வரத்து தொடங்கி உள்ளதால் சண்முகநதி ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீா் ஆா்ப்பரித்து செல்கிறது. இதனால் மானூா், நரிக்கல்பட்டி, கோரிக்கடவு, கீரனூா் உள்ளிட்ட சண்முகநதி ஆறு செல்லும் இடங்களில் கரையோரம் வசிப்பவா்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.