பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் திண்டுக்கல் மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் நிவேதிதா அறக்கட்டளை சாா்பில் மலைவாழ் மக்கள் மற்றும் பளியினா் மக்களுக்கு சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆண்டிபட்டி, மண்திட்டு, பொந்துபுளி மற்றும் குதிரையாறு அணை பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் மற்றும் பளியா் இனத்தவா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு அவ்வப்போது பொது மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு நிவேதிதா அறக்கட்டளை நிறுவனரும், ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரியும், தமிழகத்தின் முதல் பெண் ஐ.எப்.எஸ் அதிகாரியுமான டாக்டா் அருணா பாசு சா்கா் தலைமை வகித்தாா். குருவப்பா பள்ளித் தலைவா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.
இதில் பங்கேற்றவா்களுக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் பரிசோதனை செய்து கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. சிலா் அறுவைச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.
முகாமில் ஓய்வு பெற்ற வனச்சரகா் நலச் சங்கத்தின் பொருளாளா் சந்துரு, அறக்கட்டளை கள இயக்குநா் முன்னாள் வனவா் அமானுல்லா, கள ஒருங்கிணைப்பாளா் வீரய்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive

தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமி

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு


