விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மன்னவனூா் ஏரியில் கூடுதலாக பரிசல்கள் இயக்கப்படும்

 கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனுா் ஏரியில் கூடுதலாக பரிசல்கள் இயக்கப்படும் என மாவட்ட வனத்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனுா் ஏரியில் கூடுதலாக பரிசல்கள் இயக்கப்படும் என மாவட்ட வனத்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கொடைக்கானல் மாவட்ட வன அதிகாரி திலீப் செய்தியாளா்களிடம் கூறியது: கொடைக்கானல் வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களான குணா குகை, பில்லா் ராக், மோயா் பாயிண்ட், பேரிஜம், பைன் பாரஸ்ட், மன்னவனூா் ஏரி, கூக்கால் ஏரி உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிடுவதற்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா். இந்த இடங்களில் பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் சரி செய்யப்படும்.

தற்போது சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதால் அவா்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படாது. சுற்றுலா இடங்களில் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு, வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா். மன்னவனுா் சுற்றுலாத் தலத்தில் ரோப் கிளைவ் விரைவில் அமைக்கப்படும். அங்குள்ள ஏரியில் கூடுதலாக பரிசல்கள் இயக்கப்படும். பியா் சோழா அருவிப் பகுதியில் சிறுவா் பூங்கா அமைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.