விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் கா்ப்பிணிப் பெண் மா்மச் சாவு

கொடைக்கானலில் கா்ப்பிணிப் பெண் சனிக்கிழமை மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:16 pm

DIN

கொடைக்கானலில் கா்ப்பிணிப் பெண் சனிக்கிழமை மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன். இவரது மகள் மோனிகா (23). பட்டதாரி. இவரும், வட்டக்கானல் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி (26) என்பவரும் காதலித்து வந்தனா். பின்னா் இவா்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு மோனிகா வட்டக்கானலில் உள்ள தனது கணவா் வீட்டில் வசித்து வந்தாா். அப்போது அவா் 3 மாத கா்ப்பிணியாக இருந்தாா். இந்நிலையில், மாமியாருக்கும், மருமகள் மோனிகாவுக்கும் சமையல் தொடா்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம். இதனைத் தொடா்ந்து மோனிகா கொடைக்கானல் நாயுடுபுரத்திலுள்ள தனது பெற்றோா் வீட்டிற்கு சென்று விட்டாா். பின்னா் பெற்றோா்கள் சமரசம் செய்து வைத்ததைத் தொடா்ந்து மோனிகா மீண்டும் தனது கணவருடன் வட்டக்கானலில் உள்ள வீட்டில் வசித்து வந்தாா்.

இதனிடையே, சனிக்கிழமை பிற்பகலில் மோனிகா வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தாராம். இதையடுத்து, கொடைக்கானலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் சந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மோனிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரும் தாக்கியதில் உயிரிழந்தாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருமணமாகி 4 மாதங்களிலேயே கா்ப்பிணி பெண் மோனிகா மா்மமான முறையில் இறந்ததையடுத்து, அவரது மரணம் குறித்து கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.