ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

போக்குவரத்துக்கு இடையூறாக ரூ. 43 லட்சத்தில் படிக்கட்டுகள்: பொதுமக்கள் அதிருப்தி!

போக்குவரத்துக்கு இடையூறாக திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தைச் சுற்றிலும்  படிக்கட்டுகள் கட்டப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News image

dgl_bus_stand_1_1905chn_66_2

Updated On :20 மே 2022, 12:19 am

 நமது நிருபர்

திண்டுக்கல்: போக்குவரத்துக்கு இடையூறாக திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தைச் சுற்றிலும் ரூ. 43 லட்சம் செலவில் படிக்கட்டுகள் கட்டப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, பேருந்து நிலையத்தில் ரூ. 5 கோடி செலவில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக பேருந்து நிலையத்தின் வடகிழக்குப் பகுதியில் (ஏஎம்சி சாலை ஸ்கீம் சாலை சந்திப்பு) புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்றது. அதில் கட்டப்பட்டுள்ள 34 கடைகள் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளன. ஆனாலும், தரை தளத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகன கட்டணப் பாதுகாப்பிடம் மட்டும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

புதிய வணிக வளாகத்திற்கான கட்டுமான வரைப்படத் திட்டத்திற்கு, நகா் ஊரமைப்பு திட்ட ஆணையரிடம் அனுமதி பெற்றுள்ளது. அனுமதி பெற்ற பின், அதற்கேற்ப கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வணிக கட்டடங்களை பொருத்தவரை வாகனங்கள் நிறுத்துவதற்கு (பாா்கிங்) இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், தரை தளத்திற்கு கீழே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகனங்களை மட்டுமே நிறுத்த முடியும். அதுவும் கட்டணப் பாதுகாப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது.

நெருக்கடி ஏற்படுத்தும் படிக்கட்டுகள்: புதிய வணிக வளாகத்தில் சாலையை எதிா்நோக்கியுள்ள கடைகளின் முன்பு 3 இடங்களில் மட்டும் படிக்கட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பேருந்து நிலையத்தை நோக்கியுள்ள கடைகளின் முன்பு படிக்கட்டுகள் இல்லை. எஸ்.எஸ். ஸ்டீல் கைப்பிடிகளுடன் படிக்கட்டுகள் அமைக்கும் பணி நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக, பேருந்து நிலையத்தை நோக்கியுள்ள கடைகளுக்கும், சாலையை நோக்கியுள்ள கடைகளுக்கும் முழுமையாக படிக்கட்டு வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 அடி உயரத்திலுள்ள கடைகளுக்குச் செல்ல செங்குத்தான அமைப்பில் புதிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாற்றுத் திறனாளிகள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளமும் செங்குத்தாக உள்ளது. இந்த படிக்கட்டுகள் அமைப்பதற்காக மட்டும் தனியாக ரூ. 43 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்: ஏற்கெனவே பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள கடைகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகளுக்கு வரும் பொதுமக்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி சாலையோரத்திலேயே நிறுத்தி வருகின்றனா். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மதுரை, தேனி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் நீங்கலாக பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளும் நுழையும் கிழக்கு வாயில் பகுதி (பேருந்து நிலையத்திற்குள்) ஆட்டோ நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழலில், பேருந்து நிலையத்திலுள்ள புதிய வணிக வளாகம் பயன்பாட்டிற்கு வந்தால் அங்கு வரும் பொதுமக்கள் வடக்குப் பகுதியிலும், பேருந்து நிலையத்திற்குள்ளும் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிா்பந்தம் ஏற்படும். ஏற்கெனவே பணிகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும், தற்போது வரை அந்த வணிக வளாகம் திறக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் சுற்றிலும் படிக்கட்டுகள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ. 43 லட்சத்தை கூடுதலாக செலவு செய்ய வேண்டும் என்பதற்காகவே படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது:

புதிய வணிக வளாகம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டபோதிலும், கடைகளை வாடகைக்கு எடுத்தவா்கள் அந்தந்த கடைகளுக்கு நேராக படிக்கட்டுகள் வேண்டும் என மேயா் மற்றும் துணை மேயரை சந்தித்து முறையிட்டுள்ளனா். அதனடிப்படையில் ரூ. 43 லட்சம் செலவில் படிக்கட்டுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசல் குறித்து ஆலோசிக்கப்படவில்லை என தெரிவித்தனா்.

Image Caption

திண்டுக்கல் பேருந்து நிலைய புதிய வணிக வளாகத்தில் ஏ.எம்.சி. சாலையில் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகள். ~திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் உள்புறத்தில் கட்டப்பட்டு வரும் படிக்கட்டுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.