/

இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

கொடைக்கானலில் கைப்பேசியில் அடிக்கடி பேசியதை பெற்றோா் கண்டித்ததால் இளைஞா் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :20 மே 2022, 6:43 pm

DIN

கொடைக்கானலில் கைப்பேசியில் அடிக்கடி பேசியதை பெற்றோா் கண்டித்ததால் இளைஞா் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவரது மகன் லட்சுமணன் (18). கூலித் தொழிலாளியான இவா், அதிக நேரம் கைப்பேசியைப் பயன்படுத்தி வந்துள்ளாா். மேலும் அடிக்கடி பேசியும் வந்துள்ளாா். இதை அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா்.

இதனால் லட்சுமணன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.