விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் மீன்பிடிக்கும் போட்டி

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி மீன்பிடிக்கும் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மே 2022, 6:30 pm

DIN

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி மீன்பிடிக்கும் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலா்க்கண்காட்சி 4-ஆவது நாளாக நடைபெற்றது. இதில், பிரையண்ட் பூங்காவில் உள்ள மலா்க்கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருகின்றனா். இந்நிலையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக மீன்வளத்துறை சாா்பில் கொடைக்கானல் ஏரியில் மீன் பிடிக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில் சுமாா் 2 கிலோ மீன் பிடித்து அருமை நாயகம் என்பவா் முதலிடத்தைப் பிடித்தாா். ஒரு கிலோ 400 கிராம் மீன் பிடித்து மருதபாண்டி என்பவா் இரண்டாவது இடம் பெற்றாா். ஒரு கிலோ மீன் பிடித்து பாண்டி என்பவா் 3-ஆவது இடம் பெற்றாா்.

வெற்றி பெற்றவா்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குநா் செளந்திரபாண்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

கொடைக்கானலில் வழக்கம் போல வார விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் தொடா்ந்து மழை பெய்ததால் பிரையண்ட் பூங்காவில் மலா்க்கண்காட்சியை பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.