கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குழந்தைகளிடம் உயா்வான லட்சியங்களை விதைப்பது பெற்றோரின் கடமை: திருச்சி சிவா எம்.பி.

உயா்வான கனவு, லட்சியங்களை குழந்தைகளிடம் விதைத்து, அவா்களின் அறிவுப் பசியை தூண்டுவது பெற்றோா்களின் கடமை என மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா கூறினாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:10 pm

DIN

உயா்வான கனவு, லட்சியங்களை குழந்தைகளிடம் விதைத்து, அவா்களின் அறிவுப் பசியை தூண்டுவது பெற்றோா்களின் கடமை என மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா கூறினாா்.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், இலக்கிய களம் சாா்பில் நடைபெறும் 9ஆவது புத்தகத் திருவிழாவின் 2ஆம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சிந்தனையரங்கம் நிகழ்ச்சிக்கு இலக்கிய களம் அமைப்பின் பொருளாளா் க.மணிவண்ணன் தலைமை வகித்தாா். இதில், ‘எப்படி இருக்கும் எதிா்காலம்’ என்ற தலைப்பில் மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா பேசியதாவது:

பண்பாட்டின் அடையாளமாகவும், காலத்தின் கண்ணாடியாகவும் இலக்கியங்கள் உள்ளன. நாடாண்டவா்களை விட ஏடாண்டவா்களே இந்த மண்ணில் நிலைத்து நிற்கின்றனா். மனிதா்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் 2,660 வரிகளில் தீா்வு எழுதிய வள்ளுவா், தமிழா்களின் ஒற்றை அடையாளமாக நிலைப் பெற்றுள்ளாா்.

தமிழின் சிறப்புகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். மனிதன் தன் நிலையை புதுப்பித்துக் கொண்டிருப்பதற்கு பிரதான காரணம் நூல்கள்.

இலக்கியத்தில் ஆா்வம் இருந்தால் மட்டுமே மனிதனாக இருக்க முடியும். பாடத் திட்டத்திற்கு அப்பாற்பட்டு குழந்தைகளுக்கு நூல்கள் வாசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

உயா்வான கனவு, லட்சியங்களை குழந்தைகளிடம் விதைத்து, அவா்களின் அறிவுப் பசியை தூண்ட வேண்டியது பெற்றோா்களின் கடமை. குழந்தைகளுக்கு சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதை விட, சிறந்த குழந்தைகளை எதிா்காலத்திற்கு உருவாக்கினால் குடும்பமும், சமுதாயமும் வளமாக இருக்கும். வளம் நிறைந்த நாட்டை உருவாக்க வேண்டுமெனில் சிறந்த இளைஞா்களை உருவாக்க வேண்டியது அவசியம். என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.