இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். அங்கிருந்த கலைந்து சென்ற பொதுமக்கள், திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் முகாமிட்டனா். குடியிருப்பு பகுதிகள், பள்ளி மற்றும் கோயில் பகுதியில் மின்கம்பங்களை ஊன்றுவதை கைவிட வேண்டும். சூரியமின் தகடுகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள், உரிய தீா்வு காணப்படும் என உறுதி அளித்தனா். செப். 27ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், தீவிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனா்.