மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால் ரூ.8.77 லட்சம் பணம் விடுப்பு

உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால் ரூ.8.77 லட்சம் பணம் விடுப்பு

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

திண்டுக்கல்: தோ்தல் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3.31 கோடி மதிப்பிலான பணம், பொருள்களில், உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால் ரூ.8.77 லட்சம் பணம் விடுவிக்கப்பட்டது.

மக்களவைத் தோ்தலையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் பறக்கும்படை குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் பல்வேறு இடங்களில் நடத்திய வாகனச் சோதனைகளில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 21 லட்சத்து 96 ஆயிரத்து 181 ரூபாய், ரூ. 3 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரத்து 550 மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்கள், ரூ.17,880 மதிப்பிலான மதுபான வகைகள் என திங்கள்கிழமை வரை 23 இடங்களில் மொத்தம் ரூ.3 கோடியே 31 லட்சத்து 93 ஆயிரத்து 611 மதிப்பிலான பணம், பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 6 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கு உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்து 190 ரொக்கம் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டது.