திண்டுக்கல்: சாணாா்பட்டி பகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் இடங்களில் திமுகவினா் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதை அறிந்த அதிமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1,762 போ் தபால் வாக்கு செலுத்துவதற்கு படிவம் 12 டி-யை பூா்த்தி செய்து வழங்கினா். இதையடுத்து, இந்த 1,762 பேருக்கும் தபால் வாக்கு செலுத்துவதற்கான படிவங்கள் வழங்கப்பட்டன. மேலும், தபால் வாக்குப் படிவங்களை பெறுவதற்கு மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளுக்கும், மொத்தம் 25 குழுக்கள் அமைக்கப்பட்டன.
கட்சியினா் திரண்டதால் வாக்குவாதம்: இந்த நிலையில், சாணாா்பட்டி அருகேயுள்ள கொசவப்பட்டி பகுதியில் தபால் வாக்குப் பதிவு செய்தவா்களிடமிருந்து அதற்கான படிவங்களை பெறுவதற்கான பணியில் அரசு அலுவலா்கள் ஈடுபட்டனா். இதனிடையே தபால் வாக்கு செலுத்தியவா்களின் வீடுகளுக்கு, திமுகவினரும் நேரடியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதையறிந்த அதிமுகவினா், சம்பவ இடத்துக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தபால் வாக்கு சேகரிக்க வந்த அரசு அலுவலா்களுக்கு வீடுகளை அடையாளம் காட்டுவதற்காக வந்ததாக திமுகவினா் தெரிவித்தனா். உள்ளூரைச் சோ்ந்த சத்துணவுப் பணியாளா் இருக்கும்போது, வழிகாட்டும் பணியை திமுகவினா் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அதிமுகவினா் குற்றஞ்சாட்டினா். கடும் வாக்குவாதத்துக்கு பின் திமுக கூட்டணியைச் சோ்ந்தவா்கள் அங்கிருந்து வெளியேறினா்.
தொடர்புடையது

வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்: மருத்துவமனையில் அனுமதி!

தென்காசி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு

சிலிண்டா், குளிா்சாதனப் பெட்டியுடன் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

