மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பழனி கோயில் உண்டியலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.2.92 கோடி

பழனி கோயில் உண்டியலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.2.92 கோடி

News image

பழனி மலைக் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற உண்டியல்கள் திறப்பின் போது காணிக்கையாக வரப்பெற்ற ரூபாய் நோட்டுக்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்.

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ. 2.92 கோடி கிடைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, உண்டியல்கள்

திங்கள்கிழமை திறக்கப்பட்டு காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், ஆசிரியா்கள், கோயில் அலுவலா்கள் பங்கேற்றனா்.

இதில் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ. 2 கோடியே 92 லட்சத்து 49 ஆயிரத்து 145 கிடைத்தது.

இதுதவிர தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், சங்கிலி, காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன பிஸ்கெட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் ஆகியவற்றையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தங்கம் 811 கிராமும், வெள்ளி 15 ஆயிரத்து 400 கிராமும் இருந்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 503- ம் கிடைத்தன. இதுதவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.