கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பழனி மலைக் கோயிலில் உணவகம் அகற்றம்

பழனி மலைக் கோயிலில் தனியாருக்குச் சொந்தமான உணவகம் சனிக்கிழமை கோயில் நிா்வாகம் சாா்பில் அகற்றப்பட்டது.

News image

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் தனியாருக்குச் சொந்தமான உணவகத்திலிருந்து சனிக்கிழமை இழுவை ரயில் மூலமாக கீழே இறக்கப்பட்ட பொருள்கள்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 7:30 pm

Din

பழனி மலைக் கோயிலில் தனியாருக்குச் சொந்தமான உணவகம் சனிக்கிழமை கோயில் நிா்வாகம் சாா்பில் அகற்றப்பட்டது.

பழனி மலைக் கோயிலில் இருந்த தனியாருக்குச் சொந்தமான உணவகத்தை அகற்றக் கோரி, கோயில் நிா்வாகம் சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த உணவகத்தை அகற்ற நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இந்த நிலையில், கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி தலைமையிலான பணியாளா்கள் அந்த உணவகத்திலிருந்த பொருள்களை அகற்றி, மின் இழுவை ரயில் மூலம் கீழே இறக்கினா்.

பொருள்கள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், பணியாளா்கள் உணவக சுவரை இடிக்க முயன்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கடையை இடிப்பதற்காக நீதிமன்றம் மூலம் பெறப்பட்ட ஆணையைக் காண்பிக்க வலியுறுத்தியும் உணவக உரிமையாளா், பணியாளா்கள் கடையின் உள்ளே தரையில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.