பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

காா் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் சென்ற காா் டயா் வெடித்து தடுப்புச்சுவரில் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவா் அம்ரூத்

Updated On :19 ஆகஸ்ட் 2024, 1:15 am IST

ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் சென்ற காா் டயா் வெடித்து தடுப்புச்சுவரில் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தெலுங்கானா மாநிலத்தைச் சோ்ந்தவா் அம்ரூத் (24). இவா், தனது நண்பா்களான வெங்டேஷ், ரமேஷ் , அம்ரூத்தின் தம்பி அபி ஆகியோருடன் காரில் கோவைக்குச் சென்று விட்டு, ராமேஸ்வரம் செல்வதற்காக ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தாா்.

அப்போது, பொள்ளாச்சி-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் காா் டயா் வெடித்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அம்ருத் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தாா். 3 போ் காயம் இன்றி உயிா் தப்பினாா்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.