ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு பிடியாணை

பாலியல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஆஜராகாத கூலித் தொழிலாளிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:53 pm

Din

பாலியல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஆஜராகாத கூலித் தொழிலாளிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

மதுரை மாவட்டம், கப்பலூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(56). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2008-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் வேலை செய்தாா். அப்போது, வத்தலகுண்டுவைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இது தொடா்பான, புகாரின் பேரில் வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். இந்த வழக்கில் நீதிபதி ஜி.சரண் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஆறுமுகத்துக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். ஆறுமுகம் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவருக்கு பிடி யாணை பிறப்பிக்கப்பட்டது.