அமித்ஷா உருவபொம்மை அவமதிப்பு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கைது
திண்டுக்கல் ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.


திண்டுக்கல்லில் ரயில் நிலையம் முன் மத்திய அமைச்சா் அமித்ஷா உருவ பொம்மையை எரிக்க முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 25 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சட்ட மேதை அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சா்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்ததாக, நாடு முழுவதும் எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த வகையில், திண்டுக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திண்டுக்கல் ரயில் நிலையம் பகுதியில் வியாழக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் மைதீன் பாவா தலைமையில், மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராக ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அமித்ஷா உருவபொம்மையை தீ வைத்து எரிக்க முயன்றனா். இதையடுத்து, 5 பெண்கள் உள்பட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...