ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

News image
Updated On :8 மே 2024, 12:49 am

Din

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே செயல்பட்டு வந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

திண்டுக்கல் அருகேயுள்ள சாலையூா் பகுதியில் செயல்பட்டு வந்த மாவு அரைவை ஆலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் உதயா, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் வில்சன் ஆகியோா் தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மாவு அரவை ஆலையின் மின்சாரத்தை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் உற்பத்தி செய்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து இந்த குடோனை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். இதே ஆலையில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் உற்பத்தி செய்ததாக, கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் ஆலைக்கான மின்சாரத்தை அதிகாரிகள் துண்டித்தனா்.

பின்னா், அருகிலுள்ள மாவு அரவை ஆலையிலிருந்து மின்சாரத்தைப் பெற்று, மீண்டும் நெகிழிப் பை உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மின் இணைப்பை துண்டிக்கப்பட்டதோடு, கிட்டங்கியையும் பூட்டி ‘சீல்’ வைத்ததாக மாசுக்காட்டு வாரிய அலுவலா்கள் தெரிவித்தனா்.