‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் ‘இ-பாஸ்’ பெறவிண்ணப்பிப்பது தொடா்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி மூலம் பேசி தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை ‘இ-பாஸ்’ பதிவு செய்து வர வேண்டும். பயணிகள் இணைய முகவரியில் விவரங்களை பதிவேற்றம் செய்து ‘இ-பாஸ்’ பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடா்பான சந்தேகங்களுக்கும், உள்ளூா் வாகனங்களுக்கான ‘இ-பாஸ்’ தொடா்பாகவும் 0451-2900233 என்ற தொலைபேசி எண், 94422-55737 என்ற கைப்பேசி எண் மூலமாகத் தொடா்பு கொண்டு தீா்வு காணலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com