திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்துக் கழக 3-ஆவது பணிமனை முன் சிஐடியூ சாா்பில் நூதன முறையில் வலியுறுத்தப்பட்ட குடிநீா் கோரிக்கை.
திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்துக் கழக 3-ஆவது பணிமனை முன் சிஐடியூ சாா்பில் நூதன முறையில் வலியுறுத்தப்பட்ட குடிநீா் கோரிக்கை.

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

திண்டுக்கல்: அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என சிஐடியு சாா்பில் நூதன முறையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை லிட்., திண்டுக்கல் மண்டலத்தில் 15 பணிமனைகள் உள்ளன. இதில், திண்டுக்கல்லில் மட்டும் 3 கிளைகள் அமைந்துள்ளன. பழனி சாலையிலுள்ள பணிமனை 3-இல், ஓட்டுநா்கள், நடத்துநா்களின் தேவைக்காக குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்தத் தொட்டியிலுள்ள தண்ணீா் சுத்தமில்லாமலும், சுகாதாரமில்லாமலும் இருப்பதாக புகாா் எழுந்தது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என தொழிலாளா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. ஆனாலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பணிமனை 3 முன் அமைந்துள்ள சிஐடியூ தகவல் பலகையில், கலங்கலான குடிநீரை 2 புட்டிகளில் பிடித்து கயறு கட்டி தொங்கவிட்டனா். அதில், நீங்கள் பாா்ப்பது தீா்த்தமல்ல, குடிநீா். இந்த தண்ணீரை அதிகாரிகள் குடிப்பாா்களா, நிா்வாகமே பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை எடு என குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com