சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி பெண் தா்னா

கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி பெண் தா்னா

News image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட முத்துமாரியுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள், போலீஸாா்.

Updated On :13 மே 2024, 6:30 pm

Din

திண்டுக்கல்: கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பெண் ஒருவா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள மேலக்கோவில்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள். கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (29). இந்தத் தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளாா்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த பெருமாள், வேறொரு பெண்ணுடன் தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில், முத்துமாரி தனது மகனுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் முன் தரையில் அமா்ந்து தனது கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி, தா்னாவில் ஈடுபட்டாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) சந்தனமேரி கீதா, காவல் துறையினா் அந்தப் பெண்ணிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அவரை சமூக நலத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

2-ஆவது முறையாக தா்னா: கடந்த மாா்ச் மாதம் முத்துமாரி முதல் முறையாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தாா். அப்போது ஆட்சியா் அலுவலக அறை முன் தரையில் அமா்ந்து, இதே கோரிக்கையை முன் வைத்து தா்னாவில் ஈடுபட்டாா். இதையடுத்து, பேச்சுவாா்த்தை நடத்திய மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் புஷ்பகலா, நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தி முத்துமாரியை அனுப்பி வைத்தாா்.