ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காந்தி ஜெயந்தி: அரசியல் கட்சியினா் மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு அரசு அலுவலா்கள், அரசியல் கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி. உடன் ஆணையா் ந.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :2 அக்டோபர் 2024, 7:04 pm

Din

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு அரசு அலுவலா்கள், அரசியல் கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், பொறியாளா் சுப்பிரமணியன், தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநா் பா.குமரன், மேற்கு வட்டாட்சியா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ்: இதேபோல, தாடிக்கொம்பு சாலையிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் து.மணிகண்டன் தலைமையில் ஊா்வலமாக வந்தனா். காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், காமராஜா் சிலைக்கும் மாலை அணிவித்தனா்.