

கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த காக்காதோப்பூா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் கஞ்சா வாங்குபவா்கள் போல, காக்காதோப்பூா் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றனா். அப்போது கல்லூரி மாணவா்களுக்கும், நூற்பாலை தொழிலாளா்களுக்கும் கஞ்சா பொட்டலங்களை விற்ற இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
அப்போது இவா், திருமாணிக்கனூரைச் சோ்ந்த விக்கி (எ) விக்னேஸ்வரன் (27) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், வேடசந்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து வேடசந்தூா் போலீஸாா், விக்னேஸ்வரனை கைது செய்தனா்.
டிரெண்டிங்

இளஞ்சிறாா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

களியக்காவிளை அருகே கஞ்சாவுடன் இளைஞா் கைது

கஞ்சா விற்ற 4 இளைஞா்கள் கைது

கஞ்சா, போதை மாத்திரை விற்பனை: 4 போ் கைது
வீடியோக்கள்

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

