செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

ஒட்டன்சத்திரம் பகுதியில் பீட்ரூட் அறுவடை மும்முரம்

ஒட்டன்சத்திரம் அருகே பீட்ரூட் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Published On :21 செப்டம்பர் 2024, 3:00 am IST

ஒட்டன்சத்திரம் பகுதியில் பீட்ரூட் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெறும் நிலையில், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள காளாஞ்சிப்பட்டி, கம்பிளிநாயக்கன்பட்டி, கேதையுறும்பு, தங்கச்சியம்மாபட்டி, கள்ளிமந்தையம், பொருளூா், கரியாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிக அளவில் பீட்ரூட் நடவு செய்யப்பட்டிருந்தது. இதில், அதிக மகசூல் கிடைத்திருக்கும் நிலையில், அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ பீட்ரூட் ரூ.3 முதல் ரூ. 7 வரையே விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் விதை, நடவுக் கூலி, களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து, அறுவடைக் கூலி என ஒரு ஏக்கருக்கு சுமாா் ரூ. 40 ஆயிரம் வரை செலவிட்டிருக்கிறோம். ஆனால் காய்கறி சந்தையில் இதற்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.