இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நெகிழிக் குப்பைகள் சேகரிப்பு பணி

ஊராட்சியில் நெகிழிக் குப்பைகள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு விழிப்புணா்வு ஏற்படுத்திய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கிப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் அருகே ஊராட்சியில் நெகிழிக் குப்பைகள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு விழிப்புணா்வு ஏற்படுத்திய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கிப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நெகிழிக் குப்பைகள் அதிகம் தேங்கும் 14 இடங்களைத் தோ்வு செய்து குப்பை சேகரிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணியில் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த 41 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரத்தில் 252 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து, நெகிழிக் குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய தூய்மைப் பணியாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில், பரிசுப் பொருள்கள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி தலைமை வகித்து, பரிசுப் பொருள்களை வழங்கனாா்.

இதில் உதவி ஆட்சியா் (பயிற்சி) வினோதினி, மாவட்ட பசுமைத் தோழி லேக்கா வா்ஷினி, தூய்மைப் பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு.ராமாநிதி, வட்டார ஒருங்கிணைப்பாளா் நாகஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.