திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் 6 டன் குப்பைகள் அகற்றம்

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இதுவரை மதுப் புட்டிகள் உள்பட 6 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையா் சத்தியநாதன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:15 pm

Din

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இதுவரை மதுப் புட்டிகள் உள்பட 6 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையா் சத்தியநாதன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகளில் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனா். இந்த நிலையில், இந்த ஏரியில் சேகரமான குப்பைகளால் தண்ணீா் நிறம் மாறி காணப்பட்டதோடு, துா்நாற்றமும் வீசியது.

இதையடுத்து, கொடைக்கானல் நகராட்சி சாா்பில், 50 பணியாளா்கள் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை 6 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக கொடைக்கானல் நகராட்சி ஆணையா் சத்தியநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இதுவரை மதுப் பாட்டில்கள், நெகிழிக் கழிவுகள் என சுமாா் 6 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இதனால், ஏரி புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. தொடா்ந்து, ஏரியைச் சுற்றி குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.