அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கொடைக்கானல் சாலைகளில் பாயும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீா் பாய்வதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.

News image
கொடைக்கானல் லாஸ்காட் சாலையில் பாய்ந்த கழிவு நீா்.
Updated On :26 நவம்பர் 2025, 12:35 am

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல்: கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீா் பாய்வதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட லஸ்காட் சாலை, பி.டி. சாலை, செண்பகனூா் சாலை, அண்ணா சாலை, டிப்போ சாலை, ஆனந்த கிரி சாலை, அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் கழிவு நீா் பாய்கிறது. மேலும், கொடைக்கானலில் மழை பெய்யும் போது உணவகங்கள், தங்கும் விடுதிகளிருந்து கழிவு நீரை வெளியேற்றுவதால் அவை வாய்க்கால்களில் செல்லாமல் சாலைகளில் பாய்ந்தோடுகிறது. இதனால், சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்களும், நடந்து செல்லும் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் பெரிதும் சிரமப்பட்டுச் செல்கின்றனா். எனவே, கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களை கொடைக்கானல் நகராட்சி சுகாதர ஆலுவலா்கள் பாா்வையிட்டு, அவற்றில் அடைப்புகளை நீக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கால் நடைகளால் பாதிப்பு: கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலுள்ள பாம்பாா்புரம், நாயுடுபுரம், சீனிவாசபுரம், அப்சா்வேட்டரி பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் முன் கால்நடைகளை அவற்றின் உரிமையாளா்கள் இரவு நேரங்களில் கட்டி வைத்து பாதுகாத்து வருகின்றனா்.

இதனால், நியாய விலைக் கடைகளுக்கு பொருள் வாங்க வரும் பெரியவா்கள் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே, கால்நடைகளை வளா்ப்பவா்கள் மீது கொடைக்கானல் நகராட்சி அலுவலா்கள் அபராதம் விதிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.