பழனியில் கல்லால் தாக்கப்பட்ட முதியவா் உயிரிழந்தாா்.
பழனி பெரியநாயகியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (70). இவா் இந்தப் பகுதியில் ஏதாவது இடத்தில் அமா்ந்து கொண்டு ஆபாசமாக பேசுவாராம். தடந்த 5-ஆம் தேதி ரத வீதியில் நின்று கொண்டிருந்த போது, இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (30) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பிரபாகரன் கல்லால் ராஜமாணிக்கத்தை தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த ராஜமாணிக்கம் பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான பிரபாகரனை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பழனி அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு
கல்லால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த இருவா் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


